எதிர்கால பாதுகாப்புத் திட்டங்கள்: ஒரு கப்பல் மட்டுமே வெளிநாட்டில் கட்ட அனுமதி – MINDEF

top-news

கோலாலம்பூர், ஜன. 22-

எதிர்கால பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், ஒரே ஒரு கப்பல் மட்டுமே வெளிநாட்டில் கட்ட அனுமதி வழங்கப்படும் என்றும், மீதமுள்ள அனைத்து கப்பல்களும் உள்நாட்டில்  தயாரிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு (MINDEF) உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நொர்டின், உள்ளூர் திறன்கள், தொழில்நுட்ப அறிவு, அனுபவத்தை முழுமையாக பயன்படுத்துவதற்காகவே இந்தக் கொள்கை நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகத் தெரிவித்தார். நாட்டிற்குள் கப்பல்கள் தயாரிக்கப்படுவதன் மூலம், பாதுகாப்புத் துறையில் உள்ளூர் தொழில்துறைகள் வலுப்பெறும் என்றும், திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் விளக்கினார்.

கரையோர பாதுகாப்பு கப்பல்  (Littoral Mission Ship – LMS) திட்டத்தின் கீழ், துருக்கியில்  கப்பல் தயாரிக்கப்பட்டது குறித்து பேசுகையில், அந்நேரத்தில் சில குறிப்பிட்ட காரணங்கள், பரிசீலனைகள் இருந்திருக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார். அந்த முடிவு அப்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“எதிர்கால திட்டங்களில், ஒரே ஒரு கப்பல் மட்டுமே வெளிநாட்டில் தயாரிக்க அனுமதி அளிக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது,” என டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நொர்டின் வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *