ஷரியா குற்றttil சரவாக்கில் பொதுவில் பிரம்படி கொடுப்பது சாத்தியமில்லை!

- Muthu Kumar
- 04 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 4-
ஷரியா குற்றங்களுக்காக பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனையை நிறைவேற்றி இருக்கும் திரெங்கானுவை பின்பற்ற சரவாக் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று, அம்மாநில அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா கூறியுள்ளார்.
குற்றம் புரிவோருக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனையை நிறைவேற்ற அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவது ஒவ்வொரு மாநிலத்தின் உரிமை என்பதை கரீம் ஒப்புக் கொண்டார்.ஆனால், சரவாக்கில் நடப்பில் உள்ள தண்டனைகள் மாநிலத்தின் நடப்புத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“சரவாக்கின் சூழ்நிலைகளை கவனிக்கும்போது, மாநிலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்கப்படுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அத்தகைய தண்டனை விதிப்பு எங்களுக்குத் தேவையில்லை. நடப்பில் இருக்கும் தண்டனை முறையே போதுமானது” என்று கரீம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்தின் சட்டத்திற்கும் அவசியம் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறிய அவர், அத்தகைய தண்டனை விதிப்பு கொடூரமானதா அல்லது மனிதாபிமானமற்றதா என்ற கேள்வி முற்றிலும் வேறுபட்டது என்றார்.“இத்தகைய தண்டனை முறை கொடூரமானது அல்லது மனிதாபிமானமற்றது என்று பொதுமக்கள் கருதினால், அது குறித்த தங்களின் கவலையை அவர்கள் அரசாங்கம் அல்லது தகவல் சாதனங்கள் வழி வெளிப்படுத்தலாம் என்று காபுங்ஙான் சரவாக் கூட்டணியின் முத்ததலைவருமான கரீம் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சில ஷரியா குற்றங்களுக்காக பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்கும் திரெங்கானுவின் புதிய அணுகுமுறையைப் பின்பற்றுமாறு, பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் ஹஷிம் ஜாசின் அனைத்து மாநிலங்களையும் கடந்த வாரத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இரண்டாவது முறையாக கல்வத் குற்றம் புரிந்த அஃபெண்டி அவாங் (வயது 42) என்ற ஆடவனுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை கோலத் திரெங்கானுவில் உள்ள அல்-முக்தாஃபி பில்லா ஷா பள்ளிவாசலில், 90 பேர் முன்னிலையில் ஆறு பிரம்படிகள் வழங்கப்பட்ட பின்னர் ஹஷிம் அவ்வாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *