இதற்கு முன்னர் பதவியில் இருந்த இந்திய தலைவர்கள் எதைச் சாதித்தார்கள்? தங்களை மட்டுமே வளப்படுத்திக்கொண்டார்கள்! – அன்வார் சாடல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 21: 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா எனும் இந்தியர் சமூக உருமாற்றுத் திட்டத்திற்காக 100 மில்லியன் ரிங்கிட்டும், தெக்குன் மூலம் 30 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டது.

மேலும், மடானி அரசு பல்வேறு திட்டங்களை இந்திய சமுதாயத்திற்காக வகுத்துள்ளது. ஆனால், இந்திய சமுதாயத்திற்கு மடானி அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சுபாங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து என்ன செய்வது என பல அரசியல் தலைவர்களும் சாடி வருகின்றனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட தலைவர்கள் பதவியில் இருந்த போது எதை சாதித்தார்கள் என்று அன்வார் கேள்வி எழுப்பினார். அவர்கள் பதவிகளைப் பயன்படுத்தி தங்களை வளமாக வைத்துக்கொண்டார்களே தவிர, மக்களுக்கு என்ன செய்தார்கள் என அன்வார் சாடினார்.

என்வே, இதுபோன்ற இனவாத குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *