இனி அம்னோவின் அடுத்தக்கட்ட நிலை என்ன? - தெங்கு ரசாலே கேள்வி

- Shan Siva
- 06 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 6: நஜிப் ரசாக் தனது மேல்முறையீட்டில் வெற்றி பெற்றதையடுத்து அம்னோ
பிரமுகர் தெங்கு ரசாலே ஹம்சா, நஜிப் எஞ்சியுள்ள சிறைத்தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் அரச குடும்பத்தின்
மீதான தனது கோரிக்கையை தொடர, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
குவா மூசாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான அவர், இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்ட பகாங் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளரின் கடிதம் ஒற்றுமை
அரசாங்கம் தொடர்பாக நான்கு முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது என்றார்.
16 வது மாமன்னர் வழங்கிய இந்த வீட்டுக் காவல் தொடர்பான ‘அடண்டம்’ பற்றிய
எந்தத் தகவலும் அரசாங்கத்திடம் இல்லை என்பது எப்படி?
இந்த விவகாரத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் கூறியதை இது
எவ்வாறு பாதிக்கிறது?
பகாங் அரண்மனை உறுதிப்படுத்திய புதிய ஆதாரங்களின் சட்டரீதியான தாக்கங்கள் என்ன?
இந்நிலையில், அம்னோவின் எதிர்வினை
மற்றும் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும், இந்தப் புதிய ஆதாரத்துடன் ஒற்றுமை அரசாங்கத்தில் அதன் நிலை என்னவாகும்? என, தெங்கு ரசாலே ஓர் அறிக்கையில் கேள்விகளை எழுப்பியுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *