அது பழிவாங்கும் செயல்! - முக்ரிஸ் மகாதீர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 2: 2017 முதல் 2019 வரையிலான 50 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான வரி பாக்கியை செலுத்துமாறு கோரி உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) வழங்கிய நோட்டீஸ்களை சவால் செய்ய, முக்ரிஸ் மகாதீருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டிற்காக LHDN வழங்கிய நோட்டீஸ்களை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று கெடா முன்னாள் மந்திரிபெசாருமான அவர் தெரிவித்திருந்தார்..

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்ஜித் சிங், இந்த வழக்கை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்..

முக்ரிஸ் தனது விண்ணப்பத்தில், LHDN தனது வரிப் பொறுப்பு குறித்து "தவறான கணக்கீடுகளை" செய்ததாகக் கூறுகிறார்.

மேலும், 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான வரி பாக்கிகளுக்கான அறிவிப்புகள் ஆண்டுதோறும் வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனது தந்தை டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பகை, நோட்டீஸ்கள் வழங்கப்படுவதற்கு "பங்காற்றியிருக்கலாம்" என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

தனது தந்தையின் நம்பகத்தன்மையை களங்கப்படுத்துவதற்காகவும், பழிவாங்கும் செயலாகவும் இந்த கருத்துக்கள் கூறப்பட்டதாக அவர் கூறினார். அன்வாருக்கு எதிராக மகாதீர் தொடர்ந்த அவதூறு வழக்கு மற்றொரு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *