முறைகேடான DBKL குத்தகையில் எனக்கு சம்பந்தம் இல்லை-நடிகர் அஃப்லின் ஷாவ்கி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 1-

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (டிபிகேஎல்) 40 லட்சம் வெள்ளி மதிப்புள்ள கொள்முதல் குத்தகையில் நிகழ்ந்த நிதி முறைகேட்டில் தமக்குச் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுவதைத் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான டத்தோ அஃப்லின் ஷாவ்கி மறுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு அண்மைய காலமாக சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய நற்பெயரைக் கெடுப்பதுதான் இதன் நோக்கம் என்று டிபிகேஎல் ஆலோசனை மன்றத்தின் ஓர் உறுப்பினருமான அஃலின் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளேன். மாநகர் மன்றமும் உள்நிலை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. தேவைப்படும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார் அவர்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்காக கற்பனைத் திறன் உள்ளடக்கமொன்றை வெளியிடும் குத்தகையொன்று வெளியிடப்பட்டது. நாற்பது லட்சம் வெள்ளி மதிப்புடைய அக்குத்தகை ரகசியமாக வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த விவகாரம் குறித்து மாநகர் மன்றத்தின் உயர்நெறிப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக மாநகர் மன்ற மேயர் டத்தோஸ்ரீ மைமூனா முகமது ஷரிப் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *