தொழில் வல்லுநர்கள் கருத்துகளை பரிமாற ஒரு சிறந்த தளம் ஐ.ஆர்.சி 2025 மாநாடு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 8-

நாட்டின் இலக்கவியல் மறுமலர்ச்சி மற்றும் அதற்கான வாய்ப்புகளை ஆராயும் ஒரு முக்கியத் தளமாக ஐ.ஆர்.சி 2025 எனப்படும் அனைத்துலக ஒழுங்குமுறை மாநாடு இரண்டாம் ஆண்டை நோக்கி பயணிக்கவுள்ளது.

பாதுகாப்பான, சீரான இலக்கவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தொழில் வல்லுநர்கள் தங்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சிறந்த தளமாக இந்த மாநாடு அமையும் என்று இலக்கவியல் அமைச்சர் ஃபாபஹ்மி ஃபட்சில் கூறினார். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் இலக்கவியல் நிலை குறித்து விவாதிக்கப்படும்.

“முன்னோக்கிச் சிந்திக்கும் முறைகள் எவ்வாறு பாதுகாப்பை வளர்க்கலாம் என்பதில் கவனம் செலுத்துகிறது, நிலையான மற்றும் சீரான தொழில்நுட்ப முன்னேற்றம். அடுத்த இரண்டு நாட்களில், தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாதுகாப்போடு சீரமைக்க ஒழுங்குமுறை தொலைநோக்கு பார்வையை மேம்படுத்துவது குறித்த விவாதங்களில் ஈடுபடுவோம். உள்ளடக்கம் மற்றும் சமூக நல்வாழ்வு, “ என்று கூறினார்.

நேற்று  முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு அனைத்துலக ஒழுங்குமுறை மாநாட்டில் கலந்துகொண்டு அவர் அவ்வாறு உரையாற்றினார்.உலகின் தொழில்நுட்ப நவீனத்தில் நாடு பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய ஆசியாவின் பங்காளித்துவ நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த மலேசியா உறுதிப்பூண்டுள்ளதாக அவர் மேலும் விளக்கினார்.

அதோடு, இவ்வாண்டில், ஆசியானிற்கு மலேசியா தலைமையேற்பதால் அனைத்துலக இலக்கவியல் முயற்சிகள், கொள்கைகளை வடிவமைக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதுடன் அதனை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் என்று ஃபஹ்மி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *