பினாங்கில் முதல் முறையாக நடைபெறும் 23ஆவது ஆசியான்+ சாம்பியன்ஷிப் சதுரங்கப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு, ஜூன் 16-

கடந்த 23 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட தென்கிழக்காசியாவின் மிகச் சிறப்பான மற்றும் மதிப்புமிக்க சதுரங்கத் தொடரான ஆசியான்+ சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, இந்த ஆண்டு பினாங்கில் முதல் முறையாக நடைபெறவுள்ளது. இந்தப் புகழ்பெற்ற போட்டி, ஜூலை 1 முதல் 11 வரை. பினாங்கு பெர்ஜெயா தங்கும் விடுதியில விமர்சையாக நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்வை, மலேசிய சதுரங்க பேரமைப்பின் கீழ்,பினாங்கு சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தென்கிழக்காசியா முழுவதும் மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.இதன் தொடர்பில் கொம்தாரில் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பினாங்கு சதுரங்க சங்கத்தின் தலைவர் சி ஸ்வீ ஸீ, இந்த ஆண்டின் போட்டிக்கு ஒரு சிறப்பு அம்சம் இருப்பதாகக் கூறினார். மலேசியா தற்போது ஆசியான் தலைமைத்துவ நாடாக இருப்பது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் இந்த போட்டிக்கு கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது.

"இந்த போட்டி, பல இளம் சதுரங்க வீரர்களுக்கு ஒரு தொடக்க மேடையாக விளங்கியுள்ளது. இவர்கள் பலர், பின்வரும் காலங்களில் உலகளவில் பட்டம் பெற்ற வீரர்களாகவும், தங்கள் நாடுகளை அனைத்துலக அரங்கில் பிரதிநிதிக்கவுமாக உருவெடுத்துள்ளனர், என்று அவர் கூறினார்.போட்டியில் 6 வயதிலிருந்து 65+ வயது வரை பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஸ்டாண்டர்ட், ரேபிட் மற்றும் ப்ளிட்ஸ் வகைகளில் போட்டிகள் நடைபெறும் என்பதிலிருந்து. இது அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த உந்துதலாக பார்க்கப்படுகிறது.




இந்த செய்தியாளர் கூட்டத்தில், பினாங்கு மாநிலத்தின் சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார குழுத் தலைவர் வொங் ஹொன் வை, பினாங்கு மாநாட்டு மற்றும் கண்காட்சி பணியகம் (PCEB) தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வின் குணசேகரன், மாநில விளையாட்டு கவுன்சில் இயக்குநர் ஹாரி சாய் ஹெங் ஹு, பெர்ஜெயா தங்கும் விடுதியில் மேலாளர் அம்ரான் தாயிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்பாக, சி ஸ்வீ ஸீ கூறியதாவது: "பல்வேறு ஆண்டுகளாக நடந்த பரிந்துரை மற்றும் ஒத்துழைப்பின் பின், உலக சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE), இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு நேரடி பட்டங்களை வழங்கும் நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்முறையாக, 50+ மற்றும் 65+ வயதினருக்கான பிரிவுகளுக்கும், இந்த பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

பட்டங்களில், இண்டர்நேஷனல் மாஸ்டர் (IM), மகளிர் இண்டர்நேஷனல் மாஸ்டர் (WIM), FIDE khpl® (FM), மற்றும் கன்டிடேட் மாஸ்டர் (CM) ஆகியன அடங்கும். கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த பட்டங்கள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டின் போட்டியில் 20க்கும் மேற்பட்ட சதுரங்க கூட்டமைப்புகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

"2023ல் பேங்காக் மற்றும் 2024ல் லாவோஸின் வியன்டியான் நகரங்களில் வெற்றிகரமாக நடைபெற்ற இந்த போட்டி, 2025இல் பினாங்கில் நடைபெறுவது பெரும் மதிப்பாகும். இது திறமை, நுண்ணறிவு, பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் பகிர்ந்த இலக்குகளின் விழாவாக அமையும், என்று அவர் கூறினார்.இதனைத் தொடர்ந்து, வொங் ஹொன் வை கூறியதாவது: "ஜூலை மாதம், பினாங்கு. ஆசியான் சதுரங்கத்தின் தலைநகராக மாறுகிறது.

யுனெஸ்கோ உலக உலக பாரம்பரிய நகரமான ஜோர்ஜ்டவுனில் இந்த விழா நடைபெறுவது பெருமை. சதுரங்கம் ஒரு
விளையாட்டைத் தாண்டி அது அறிவுத் திறன், பொறுமை, கற்பனை ஆகியவற்றின் சோதனை. ஒவ்வொரு நகர்வும் ஒரு புதிய அத்தியாயம் எழுதுகிறது.பினாங்கு சுற்றுலா மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பின் செயல் அதிகாரி அஸ்வின் குணசேகரனும், "மாநில அரசின் முழுமையான ஆதரவு
வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும்" என்றார்.

தொடர்புக்கு:பினாங்கு சதுரங்க # www.penangchess. com](http://www. penangchess.com)

Kejohanan Catur ASEAN+ 2024 akan diadakan buat kali pertama di Pulau Pinang pada 1–11 Julai. Lebih 400 peserta pelbagai umur dijangka bertanding. Pemenang layak menerima gelaran rasmi FIDE. Acara ini turut disokong penuh oleh kerajaan negeri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *