நாட்டின் பொருளாதாரத்தை மடானி அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 12-

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் சமூகப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் திட்டமிட்டு மேற்கொள்வதில், மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதி கொண்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இவ்வட்டாரத்தின் வளப்பத்திற்காக, இவ்வாண்டில் ஆசியான் தலைவராக நாட்டின் அடையாளத்தையும் அரசாங்கம் வலிமைப்படுத்தி இருப்பதாகவும், தமது முகநூலில் நேற்று பதிவிட்ட ஒரு பதிவில் அன்வார் கூறியுள்ளார்.

இவ்வாரத்தில், மூன்று வெளிநாடுகளின் தலைவர்கள் அதாவது சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோரின் மலேசியாவிற்கான வருகை, புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் நாட்டிற்கு மிகவும் அர்த்தம் உள்ளதாக அமைய விருப்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

தற்போது இருக்கும் நெருக்கமான உறவை வலுப்படுத்துவதுடன், சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களில், மக்களுக்கும் நாட்டிற்கும் பயனளிக்கக் கூடிய புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல், ஆசியான் தலைவர் பதவியை மலேசியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுள்ளது 1977, 1997, 2005 மற்றும் 2015ஆம் ஆண்டுகளைத் தவிர்த்து ஐந்தாவது முறையாக மலேசியா இப்பதவியை ஏற்றிருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *