பத்து பூத்தே விவகாரம்: நாட்டின் இறையாண்மை மீதான துரோகம்-அஸ்னான் பின் தாமின்!

- Muthu Kumar
- 17 Dec, 2024
(கோகி கருணாநிதி)
தஞ்சோங் சுராட், டிச. 17-
தஞ்சோங் சுராட் சட்டமன்ற உறுப்பினர் அஸ்னான் பின் தாமின், பத்து பூத்தே தொடர்பான சிறப்பு அரசியல் விசாரணைக் குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை குறித்து ஆழ்ந்த வருத்தமும் கவலையும் தெரிவித்தார். “பத்து பூத்தே தொடர்பான இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான எங்களது நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டுள்ளது. இழந்தது வெறும் ஒரு கல்லல்ல, மாறாக அது நம் தாய்மண்ணின் இறையாண்மை என்று வலியுறுத்தினார்.
டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட சிறப்பு அரசியல் விசாரணைக் குழு அறிக்கை மலேசிய அரசு 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீளாய்வு செய்யாததையும்,புதிய ஆதாரங்கள் இருந்தபோதும் அவற்றை முற்றிலும் புறக்கணித்ததையும் குறிக்கிறது. “இவ்வளவு முக்கியமான முடிவு, ஒருதலைப்பட்சமாக அந்த நேரத்தில் இருந்த பிரதமரால் எடுக்கப்பட்டுள்ளது.
இது சட்ட வல்லுநர்கள் மற்றும் வரலாற்று உண்மைகளை புறக்கணித்த முடிவாகும். இது நாட்டின் இறையாண்மை மீதான மிகப்பெரிய துரோகமாகும். என்று அவர் சாடினார். மேலும் அவர், “இந்த விவகாரத்தில் மலேசிய அரசு தன்னுடைய தார்மீக பொறுப்பை ஏற்று, துரோகம் புரிந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். இது ஓர் அரசியல் விவகாரமாக பார்க்கப்படக்கூடாது. இறையாண்மை என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும்," என்றார் அஸ்னான் பின் தாமின்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *