சண்டை நிறுத்தத்தை இந்தியா-பாகிஸ்தான் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்- டிரம்ப்!

top-news
FREE WEBSITE AD

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு தானே காரணம் என இத்தனை நாள் கூறி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முதன் முறையாக அந்த கூற்றை மாற்றியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனிருக்கு வெள்ளை மாளிகையில் மதிய விருந்தளித்து, பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு பேசிய ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தொடங்க இருந்த அணு ஆயுதப் போரை, இரு நாட்டின் மிகவும் புத்திசாலியான தலைவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார்.

அசிம் முனிரை சந்தித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், அவருடன் ஈரான் - இஸ்ரேல் போர் தொடர்பான சூழ்நிலை குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு, பாகிஸ்தான் ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா யோசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், ட்ரம்ப்பின் இந்த கூற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே, தொலைபேசி வாயிலாக பேசியதை சுட்டிக்காட்டி, இந்திய பிரதமர் மோடியையும் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்து பேசி வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், வெள்ளை மாளிகையில், இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதையும் நினைவுகூர்ந்தார் ட்ரம்ப்.

மிகவும் புத்திசாலிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள், அணு ஆயுதப் போராக உருவெடுக்க இருந்த போரை கைவிட முடிவெடுத்தார்கள் என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார். இரு நாடுகளும் மிகப் பெரிய அணு ஆயுத நாடுகள் என்றும், இரு நாட்டின் தலைவர்களாலும் அது தடுத்து நிறுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில் தான், தற்போது முதன் முறையாக, இந்தியா - பாகிஸ்தான் தலைவர்கள் போரை நிறுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார் ட்ரம்ப். ஆனாலும் அவரை நம்ப முடியாது. வரும் நாட்களில் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *