வாகனங்கள் மோதியதில் தம்பதியர் உயிரிழந்தனர்.

- Muthu Kumar
- 06 Jan, 2025
சிரம்பான், ஜன 6:
ஜாலான் சிரம்பான்-குவாலா பிலாவில் மூன்று வாகனங்கள் மோதியதில் தம்பதியர் உயிரிழந்தனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிரம்பான் காவல்துறைத் தலைவர் முகமட் ஹட்டா சே டின் தெரிவித்தார். பலியான இருவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
கோலப் பிலாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த 22 வயதுடைய நபர் தனது காரைக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற இரண்டு கார்கள் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அவர் கூறினார்.
முன் இருக்கையில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது கணவர் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவர் கூறினார்.இந்த விபத்தில் தனியாக ஓட்டி வந்த 22 வயது ஓட்டுநரின் இரு கால்களும் முறிந்தது, மூன்றாவது காரில் இருந்த ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *