நாடு முழுவதும் 29 இடங்களில் இன்று பிறை பார்க்கப்படுகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 28:  ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக  இன்று  இரவு 7.50 மணிக்கு ரமலான் பிறை பார்க்கப்படும் என்று சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் நயிம் மொக்தார் கூறினார்.

இது தொடர்பாக மலாய் அரச முத்திரை காப்பாளர் இன்று இரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனித மாதத்தை வரவேற்க இஸ்லாம் மக்கள் ஆவலாக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், புனிதப் பெருநாளை நோன்பை கடைபிடித்து வரவேற்போம் என்று கூறினார்,.

ரமலான் பிறை பார்க்கும் நிகழ்வு மலேசியா முழுவதும் 29 இடங்களில் பார்க்கப்படும் என்று  அவர் குறிப்பிட்டார். இன்று பிறை தெரியவில்லை என்றால் நாளை மாலை மீண்டும் நாடு முழுவதும் பிறை பார்க்கப்படும் என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *