நகை திருடிய மூன்று வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிகள்!

- Muthu Kumar
- 07 Feb, 2025
மலாக்கா, பிப் 7:
வீட்டை சுத்தம் செய்யும் வேலையில்
ஈடுபட்டிருந்தபோது நகைகளைத் திருடியதாக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ், மலாக்கா ஆயர் குரோவில் உள்ள தாய் மற்றும் அவரது மகள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் Nur Afiqah Radhiah Zainurin முன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் மூன்று குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களான 46 வயது எஸ். வைரவி, மற்றும் அவரது மகள் 19 வயது சி. தர்ஷினி ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
வைரவி, 61 வயது ஆடவரின் தங்க மோதிரத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.17 வயது பெண்ணின் தங்க choker necklace மற்றும் ஒரு ஜோடி தங்க காதணிகளைத் திருடியதற்காக தர்ஷினி இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் ஜனவரி 13 வரை மலாக்கா, தாமன் ஸ்ரீ மங்கா பிரிவு 1, ஜாலான் ஸ்ரீ மங்காவில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *