நாட்டில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 2:


நேற்று இரவு 8 மணியளவில், நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140,896 ஆகக் குறைந்துள்ளது.
பேராக் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, 36 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

பகாங், ஜொகூர் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது, அதேசமயம் கிளந்தான், திரெங்கானு, கெடா, நெகிரி செம்பிலான் மற்றும் பெர்லிஸ் ஆகிய இடங்களில், இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

பகாங்கில் 1,230 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக நலத்துறை தெரிவித்துள்ளது. ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 728 ஆக உயர்ந்தது.

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,742 ஆக குறைந்துள்ளது. திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது மொத்தம்  40,604 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கெடாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,954 ஆகக் குறைந்துள்ளது, அதே சமயம் நெகிரி செம்பிலானும் 1,198 ஆகக் குறைந்துள்ளது. பெர்லிஸில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆகக் குறைந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *