பெர்னாமாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்த கியூபா குடியரசு விருப்பம்!

top-news
FREE WEBSITE AD

கோலாம்பூர், 28-

வரும் காலங்களில், செய்திகள் மற்றும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்து பகிர்வதில் மலேசிய தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்த கியூபா குடியரசு விரும்புகிறது.

இதன் வழி மலேசியா - கியூபா குறித்து துல்லியமான தகவல்களைப் பகிர்வதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதும், இந்த ஒத்துழைப்பின் வழி ஊக்குவிக்கப்படுவதாக மலேசியாவுக்கான கியூபா குடியரசுத் தூதர் ஃபுளோரெண்டினோ பாடிஸ்டா கோன்சலேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியின் வழி மலேசியா போன்ற பிற நாடுகள் பற்றி கியூபா விரிவான தகவல்களைப் பெறுவதோடு, இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் குறித்து நாடு முழுவதும் உள்ள அனைவரும் அறிய வாய்ப்புள்ளதாக ஃபுளோரெண்டினோ பாடிஸ்டா கோன்சலேஸ் கூறினார்.அதேவேளையில், இணையத்தில் பொறுப்பற்ற தரப்பினரால் பதிவேற்றப்படும் மலேசியா - கியூபா குறித்த தவறான தகவல்களை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

"நாடுகளுடன் ஏற்படும் நட்பின் மூலமாகவோ அல்லது அறிவு மூலம் எதிர்காலத்தை உருவாக்க நமது சொந்த உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்வது மிக முக்கியமானது. அதைத்தான் பெர்னாமாவுடன் நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்ப விரும்புகிறோம்", என்று அவர் கூறினார்.

விஸ்மா பெர்னாமாவில், நேற்று பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூர்-உல் அஃபிடா கமாலுடினைச் சந்தித்த பின்னர் அவர் பெர்னாமா தொலைக்காட்சியிடம் அதனைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *