பண்டிகை காலம் அரசின் பரிசுக் காலம் அல்ல! – ஜாஹிட் ஹமிடி

- Shan Siva
- 22 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 22: பண்டிகைக் காலத்தில் இனி கட்டண விலக்கு அளிக்கப்படாது என்பதால், சாலைப் பயணிகளை இப்போதே திட்டமிடுமாறு துணைப் பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார்.
சாலைப் பயனாளிகள்
பண்டிகைக் காலத்தை, கட்டண விலக்கு
வடிவில் அரசாங்கத்திடம் இருந்து 'பரிசுகள்'
பெறுவதற்கான காலகட்டமாக நினைப்பதை நிறுத்த
வேண்டும் என்று அவர் கூறினார்.
பண்டிகைக்
காலங்களில் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டபோது, ஒரு நாளைக்கு RM35 மில்லியனுக்கும் அதிகமாக அரசாங்கம் திருப்பிச் செலுத்த
வேண்டும் என்று ஜாஹிட் கூறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பண்டிகைக் காலங்களில் சுங்க வரி விலக்குகளை ரத்து செய்வது குறித்து அரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நந்தா லிங்கி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *