மலேசியாவில் “டீப்சீக்” தாக்கம்-அரசாங்கம் ஆராய்கிறது-கோபிந்த் சிங்!

- Muthu Kumar
- 03 Feb, 2025
ஷாஆலம், பிப். 3-
சீனாவின் “டீப்சீக்” எனப்படும் திறந்தமய செயற்கை நுண்ணறிவுத் தளம் மலேசியாவில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிவதற்காக அரசாங்கம் ஆய்வு நடத்தி வருகிறது. “டீப்சீக்' தொழில்நுட்பம் தொடர்ந்து பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல் போட்டி நிறுவனத்தின் ஓப்பன்ஏஐ சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தைவிட அதிக திறன்வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
“டீப்சீக்' தொழில்நுட்பத்தையும் அதன் மாடலையும் உள்ளூரில் பயன்படுத்துவதற்கு முன்பு அது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராயும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார். கடந்த காலத்தில் சாட்ஜிபிடி தொழில்நுட்ப அம்சமும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் இதர பல அம்சங்களும் அறிமுகமாகின. இது தொடர்ந்து நடைபெறக்கூடியதாகும். இந்த நவீனத் தொழில்நுட்பத்தை அரவணைத்துக் கொண்டு நாம் முன்னேற வேண்டும். ஆகவே, அதற்கு முன்பாக அதனை நாம் ஆராய வேண்டியிருக்கிறது என்று
ஷா ஆலமில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயிலில் இலக்கவியல் மேலாண்மைமுறை பற்றிய விளக்கமளிப்பு நிகழ்ச்சியில் கோபிந்த் சிங் கலந்து கொண்டார். சீனாவின் டீப்சீக் சாட்போட் ஏஐஅம்சம் உலக அளவில் பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது என்றும் தனது போட்டி நிறுவனமான சாட்ஜிபிடி அம்சத்தை விட அது சிக்கனமானது என்றும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 29ஆம் தேதியன்று டீப்சீக் பற்றிய தகவல் வெளியானதைத் தொடர்ந்து கூகுள், ஒப்பன்ஏஐ போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் படுவீழ்ச்சி கண்டன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *