போலி அடையாள அட்டை கும்பலை உள்துறை அமைச்சு கண்டுபிடித்துள்ளது!

- Muthu Kumar
- 23 Dec, 2024
கோலாலம்பூர், டிச.23-
பொறுப்பற்ற தரப்பினரால் அடையாள அட்டையைப் போலியாக்கும் கும்பல் உருவாகியிருப்பதை உள்துறை அமைச்சு கண்டுபிடித்துள்ளது.இருந்த போதிலும் இவ்விவகாரம் இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பது அமைச்சு மேற்கொண்ட கண்ணோட்டத்தின் வழி தெரிய வந்ததாக அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பொதுமக்களிடையே போலி அடையாள அட்டைகளைக் கொண்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடு முழுவதும் வெளிச் செல்லும் திட்டங்களை தேசியப் பதிவிலாகா (ஜேபிஎன்) மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் போலி அடையாள அட்டையின் அம்சங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு ஆகும். இதில் போலி அடையாள அட்டையின் கூறுகளைச் சமூகத்தினருக்குக் காட்ட அமைச்சு விரும்புகிறது, காரணம் அசலான அடையாள
அட்டையில் சிறப்புக் கருவியைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே இருக்கும்.
ஆகையால், இத்திட்டத்தின் வாயிலாகப் போலி ஆவணங்கள் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். போலி அடையாள அட்டையைத் தவறுதலாகக் கண்டுபிடித்தால் அதை அமலாக்கத் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதைச் சமூகத்தினருக்கு அரசாங்கம் கற்றுக் கொடுக்க விரும்புகிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய போது செனட்டருமான டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *