எச்ஆர்டி கோர்ப்பின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்க வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 10-

மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (எச்ஆர்டி தலைமைத்துவத்தை அடியோடு மாற்றியமைக்கும்படி ஜசெ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.எச்ஆர்டி கோர்ப்பின் நிர்வாகம் தவறேதும் செய்யவில்லை என்று எம்ஏசிசி அறிவித்திருக்கும் நிலையில் பக்காத்தான் ஹராப்பானின் கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் லஞ்சம் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று எம்ஏசிசி தெரிவித்திருந்தாலும், நல்லாட்சிக்கு மடானி அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது.வெளிப்படைத்தன்மையும் உயர்நெறிகளும் அமல்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்துவரவேண்டும் என்று எச்ஆர்டி கோர்ப் மீதான மனிதவள அமைச்சின் தொடர் நடவடிக்கை பற்றிய பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கை குறித்து விவாதத்தின் போது அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, எச்ஆர்டி கோர்ப் மக்களிடையே தனது நற்பெயரை நிலைநிறுத்த தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பொதுக் கணக்குக் குழுவை முன்னதாகத் தாக்கல் செய்து பேசிய சிம் ஸே சின் வலியுறுத்தினார்.

எவர் மீதும் எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. எவரையும் குற்றஞ்சாட்டவும் விரும்பவில்லை. ஆனால், மக்களிடையே அது தனது நன்மதிப்பை நிலை நாட்ட வேண்டியுள்ளது என்று பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான சிம் சொன்னார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *