வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு BN உதவி!

- Muthu Kumar
- 07 Dec, 2024
கோலாலம்பூர், டிச 7:
பாரிசான் நேஷனல் மொத்தம் 1,000 அடிப்படை உதவிப் பொதிகளையும், 400 தன்னார்வலர்களையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து இடங்களுக்கு அனுப்பியுள்ளது.உதவி முயற்சியில் அம்னோ சிஸ்வாவைச் சேர்ந்த 100 மாணவர்கள் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு, பானங்கள், உடைகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக ஏழு கார்கள், இரண்டு வேன்கள் மற்றும் 15 லாரிகள் மூலம் அவை அனுப்பப்பட்டன.
கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடாவில் பாதிக்கப்பட்ட ஐந்து பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவிகள் விநியோகிக்கப்படும் என்று தெர்விக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *