Apple S மிட்டாயில் ரசாயனம்! – விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜன 23: உடல் எடையைக் குறைக்கும் “Apple S” மிட்டாயில் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருள் இருப்பதை சுகாதார அமைச்சு கண்டறிந்ததை அடுத்து, அதன் விற்பனையை அமைச்சு நிறுத்தியுள்ளது.

 பசியைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் sibutramine என்ற மருந்தைக் கொண்டிருப்பதை சோதனைகள் கண்டறிந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது மூளையை நேரடியாகப் பாதிக்கும் என அமைச்சு எச்சரித்துள்ளது.

 இந்த ரசாயனம் இதய செயல்பாடுகளை சீர்குலைத்து, வறண்ட உதடுகள், குமட்டல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிற பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

எனவே, விற்பனையாளர்கள் உடனடியாக இவற்றின் விற்பனையை நிறுத்திவிட்டு அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள உத்தரவிடப்படுகிறார்கள். அதே நேரத்தில் தயாரிப்பின் ஆன்லைன் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்றும் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

தயாரிப்பைப் பயன்படுத்தும் பொதுமக்கள் உடனடியாக அவ்வகை கேண்டியை உட்கொள்வதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *