இவ்வாண்டு விபத்துகளின் எண்ணிக்கை குறைவு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, பிப் 4: ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2 வரையிலான காலகட்டத்தில் ஓப்ஸ் செலாமாட்டில் பதிவான விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 104 ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இவ்வாண்டு 64 ஆகக் குறைந்துள்ளதாக காவல் துறைத் தலைவர் ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

சீனப் புத்தாண்டுடன் இணைந்து நடைபெற்ற ஓப் செலாமாட் 23 பாராட்டு விழாவில் தனது உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

விபத்துக்களில் சிக்கிய வாகனங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு 12,414 ஆக இருந்த நிலையில், 10,715 ஆக இவ்வாண்டு குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

 தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட , ஓப்ஸ் செலாமாட் 23 நடவடிக்கையில் 124,286 சம்மன்கள் வழங்கப்பட்டதாக ரசாருடின் குறிப்பிட்டார், இது கடந்த ஆண்டு 183,033 ஆக் இருந்ததாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *