தெற்கு தாய்லாந்தில் திருமணம் செய்யும் மலேசிய ஜோடிகளின் எண்ணிக்கை 40% குறைவு!

- Muthu Kumar
- 15 Jan, 2025
பெட்டாலிங் ஜெயா:
டிசம்பர் 1 ஆம் தேதி சட்டவிரோத பாதைகள் வழியாக நாட்டின் எல்லைகளைக் கடப்பதற்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்து தெற்கு தாய்லாந்தில் திருமணம் செய்து கொள்ளும் மலேசிய ஜோடிகளின் எண்ணிக்கை 40% குறைந்துள்ளது.
கடுமையான எல்லை சோதனைகள் காரணமாக பல மலேசிய ஜோடிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்ததாக நாராதிவத் இஸ்லாமிய கவுன்சிலின் துணைத் தலைவர் அப்துல் அஜீஸ் சே மமத் கூறினார்.
கடந்த ஆண்டு, தாய்லாந்தின் இந்தப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட மலேசிய ஜோடிகள் திருமணம் செய்து கொண்டதாகவும், பெரும்பாலானவை கிளந்தான் மற்றும் திரெங்கானுவிலிருந்து வந்ததாகவும் அவர் கூறினார்.
முன்பு, இங்கு தினமும் நான்கு முதல் ஐந்து ஜோடிகள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் இப்போது அது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஜோடிகளாக மட்டுமே குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாராதிவத்துக்கு திருமணத்திற்காக வரும் பெரும்பாலான மலேசிய ஆண்கள் பலதார மணம் செய்ய விரும்புவதாகவும், பலர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், இதில் அரசு ஊழியர்களும் அடங்குவர் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *