நாயை சுத்தியலால் தாக்கியவர் கைது!

- Shan Siva
- 21 Jan, 2025
ஈப்போ, ஜன 20: ஈப்போ, தாமான் ரியாவில் உள்ள ஒரு
வீட்டுத் தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை தனது நாயை சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும்
மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட 42 வயது நபர் இரவு 8 மணியளவில் தனது நாயை சுத்தியலால்
தாக்கியதாகத் தெரிவித்தார், ஏனெனில் அந்த நாய்
கடித்ததால் கோபமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மலேசியன் டாக்ஸ் டிசர்வ்
பெட்டர் என்ற பேஸ்புக் பக்கத்தில் வைரலாகி வந்த 43 வினாடிகள் கொண்ட வீடியோ பதிவைக் கண்ட புகார்தாரர், இன்று காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து அந்நபர் கைது செய்யப்பட்டதக் ஈப்போ மாவட்ட
காவல்துறைத் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமட் தெரிவித்தார்.
பேராக் கால்நடை சேவைகள்
துறையால் சிகிச்சைக்காக அந்த நாய் மீட்கப்பட்டது.
சந்தேக நபரிடம் குற்றம்
தொடர்பான நான்கு பதிவுகளும், போதைப்பொருள்
தொடர்பான 17 பதிவுகளும் இருப்பது
கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *