பூனையை இழுத்துச் சென்றவர் கைது!

- Shan Siva
- 25 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 25: கோலாலம்பூரில் ஒரு கொண்டோமினியம் கட்டிடத்தில் ஆடவர் ஒருவர் பூனையை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று துன்புறுத்தியது தொடர்பாக 43 வயது சம்பந்தப்பட்ட நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்
நேற்று அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் ருஸ்டி
இசா தெரிவித்தார்.
குற்றம்
நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
ஜாலான் கிளாங்
லாமா, ஸ்காட் கார்டன் கொண்டோமினியம் அருகே அந்த நபர்
பூனையை இழுத்துச் செல்ல்லும் வீடியோ வைரலானதை அடுத்து, பொது உறுப்பினர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனை அடுத்து
சம்பந்தப்பட்ட நபர் கைதசெய்யப்பட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *