பூனையைக் கட்டி இழுத்துசென்ற நபர்! காவல்துறை விசாரணை

- Shan Siva
- 24 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 24: கோலாலம்பூரில் உள்ள ஒரு காண்டோமினியம் கட்டிடத்தில் ஒரு பூனையின் கழுத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர் விலங்குகளைத் துன்புறுத்தியதற்காக விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5.26 மணியளவில் சமூக வலைதளத்தில் வைரலான அந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்களால் புகார் அளிக்கப்பட்டதாக நகர காவல்துறைத் தலைவர் ருஸ்தி இசா தெரிவித்தார்.
ஜாலான் கிளாங் லாமாவில் உள்ள ஸ்காட் கார்டன் காண்டோமினியத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு கால்நடை சேவைகள் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, இது விலங்கு கொடுமைக்கான பிரச்சினையை விசாரிக்கிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *