இயோவிடமிருந்து போலீசார் விரைவில் வாக்குமூலம் பெறுவர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 4-

'பிக்கமிங் ஹன்னா எ பெர்சனல் ஜெர்னி' என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தின் உள்ளடக்கம் தொடர்பில் போலீசார் விரைவில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோவிடமிருந்து வாக்குமூலம் பெறவிருக்கின்றனர்.

அப்புத்தகம் தொடர்பில் நாடு முழுமையிலுமிருந்து போலீசார் 157 புகார்களைப் பெற்றிருப்பதாக, கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்தார்.

“இதன் தொடர்பிலான விசாரணைக்கு உதவுவதற்காக இதுவரையில் 45 தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன” என்று, கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது அஸ்ரி கூறினார்.இயோ வெளியிட்டிருக்கும் அப்புத்தகத்தை உள்துறை அமைச்சு தடை செய்ய வேண்டும் என்று கோரி, பல அரசு சாரா அமைப்புகள் போலீசில் புகார்களை செய்திருந்தன.

இஸ்மாமியர்களை மதமாற்றம் செய்ய அல்லது மலேசியாவை ஒரு கிறிஸ்துவ நாடாக ஆக்க தாம் எண்ணம் கொண்டிருப்பதாக சித்தரிக்கும் செய்திகளும் காணொளிகளும் பகிரப்பட்டு வருவதற்கு எதிராக இயோ போலீசில் புகார் செய்திருக்கின்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *