காய்கறிகளின் விலை 50 விழுக்காட்டிற்கும் மேல் வீழ்ச்சியடைந்து விட்டது!

top-news
FREE WEBSITE AD

ஜோகூர்பாரு, டிச.30-

அண்மைய காலமாக வானிலை மிகவும் நன்றாக இருந்து கையிருப்பு குவிந்ததைத் தொடர்ந்து காய்கறிகளின் விலை 50 விழுக்காட்டிற்கும் மேல் குறைந்து விட்டது.
வானிலை நன்றாகி விட்டதால் தோட்டங்கள், கொல்லைப் புறங்களில் காய்கறிகளின் கையிருப்புகள் நல்ல நிலைக்கு வந்து நிறைய உற்பத்திகளைத் தற்போது அறுவடை செய்ய முடிகிறது என்று மலேசியக் காய்கறிகள் பயிரிடுவோர் சம்மேளனத் தலைவர் லிம் செர் வீ தெரிவித்தார்.

காய்கறிகள் மிக அதிகமாகக் குவிந்து விட்டதால் அவற்றின் விலை கடந்த மாதத்தைக் காட்டிலும் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துவிட்டதோடு வாங்குவதும் குறைந்து விட்டது.தோட்டங்களிலிருந்து வரும் வெள்ளரிக்காயின் விலை கிலோவிற்கு இதற்கு முன்பு வெ.3.50 முதல் 4ஆக இருந்தது. ஆனால் தற்போது கிலோவிற்கு வெ.1.50 மட்டுமே.

அதே போல் இதற்கு முன்பு கிலோவிற்கு
வெ.6. 7ஆக இருந்த கடுகுக் கீரை, பசளைக் கீரையின் விலை தற்போது வெ.2, 3ஆக விற்கப்படுகிறது.இதில் காய்கறிகளின் குவியல் அடுத்த மாதத்தில் சீனப் புத்தாண்டின் போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்று நம்பப்படுகிறது.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் இருந்ததைப் போல் கனத்த மழை, வெள்ளம் இல்லாமல் தொடர்ச்சியாக நல்ல வானிலை இருக்கும். இதன் மூலம் கையிருப்புச் சீரடைந்து மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று காய்கறி மொத்த வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் சில மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பெய்ததில் காய்கறிகளின் உற்பத்தி 40 விழுக்காட்டிற்கும் மேல் பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.இதனால் சில மாநிலங்களின் கொல்லை, தோட்டப்புறங்களில் காய்கறிகளின் கையிருப்பு குறைந்து அவற்றின் விலை நாடு முழுவதும் 50 முதல் 100 விழுக்காடு வரை உயர்ந்து விட்டதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது லிம் செர் வீ குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *