ஜொகூர் கைவினை 2024 விழாவில் கைவினைக் கலையின் பெருமை!

- Muthu Kumar
- 20 Dec, 2024
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, டிச. 20-
மலேசிய கைவினைப் பொருட்கள் கழகம் (Kraftangan Malaysia) மூலமாக சுற்றுலா. கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (MOTAC) 2024 ஆம் ஆண்டுக்கான ஜொகூர் கைவினைப் பெருவிழாவை நேற்று முதல் டிசம்பர் 30 வரை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அங்சானா ஜொகூர் பாரு மால்-இல் அமைந்துள்ள அகாசியா திடலில் நடைபெறுகிறது.
இந்த விழாவின் நோக்கம் மலேசிய கைவினைப் பொருட்களை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதோடு. அந்தப் பொருட்களை வர்த்தக ரீதியாக மேம்படுத்துவதற்கான தளமாக இருக்கிறது. அதோடு, மலேசியாவின் தனித்துவமிக்க கைவினைப் பொருட்கள் குறித்த அறிவு மற்றும் விழிப்புணர்வையும் உயர்த்துவது இதன் முக்கிய இலக்காகும்.
2024 ஜொகூர் கைவினைப் பெருவிழாவை மேலும் வண்ணமயமாக்கும் வகையில், தெற்கு நகரப் பெருவிழா 2024 (Festival Kota Selatan 2024) ஜொகூர் மாநில கலாச்சார மற்றும் கலைத்துறை ஒழுங்கு செய்து வழங்குகிறது. இதன் மூலம் ஜொகூர் மாநிலத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பிரபலமாக்கப்படும். இதில் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், நச்சத்திர மாலை நிகழ்ச்சிகள், கலைத்தொகுப்பு இசை நாடகம் மற்றும் தாரா இசை நாடகம், மற்றும் சுவையான பாரம்பரிய உணவுக் கடைகள் இடம்பெறுகின்றன.
இந்த விழா தொடர்பான மேலும் விவரங்களுக்கு மலேசிய கைவினை பொருட்கள் கழகத்தின் 07-2350433 தொலைபேசி எண்ணில் தொடர்பு என்ற தொலைபேசி கொள்ளலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *