ரயில்வேதுறையில் 25,000 வேலை வாய்ப்புகள் உள்ளன-துணைப் பிரதமர்!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், டிச. 12-

ரயில்வே தொழில்துறையில் இருபத்தைந்தாயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன. பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுச்சீரமைப்பு பிரிவுகளில் அந்த வேலை வாய்ப்புகள் உள்ளன என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அந்த வேலைகளுக்கான சராசரி ஆரம்பச் சம்பளம் மூவாயிரம் வெள்ளியாகும். மாணவர்களுக்கு உள்நாட்டிலேயே பயிற்சியளிக்க முடியும். ஆயினும், பல மாணவர்கள் பயிற்சிக்காகவும் அனுபவத்திற்காகவும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நுணுக்கவியல் மற்றும் தொழில்கல்விப் பயிற்சி (திவெட்)துறை தற்போது மரபுசார்ந்த, பாரம்பரியத் திட்டங்களை ஒதுக்கிவைத்து விட்டு உயர்தொழில்திறன் சார்ந்த பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *