செத்தியா ஆலம் துப்பாக்கிச்சுடு சம்பவத்தில் துப்பாக்கி எங்கு கிடைத்தது? ஆய்வுகள் அவசியம்! – நிபுணர்கள் வலியுறுத்து

- Shan Siva
- 15 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 15: செத்தியா ஆலமில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் சப்ளையரைக் கண்டுபிடிக்க காவல்துறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத
துப்பாக்கி வைத்திருப்பதைத் தடுப்பதில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த
சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது குற்ற ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதம் கறுப்புச்
சந்தை மூலம் பெறப்பட்டிருந்தால். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபருடன்
தொடர்புடைய சட்டவிரோத துப்பாக்கி பரிவர்த்தனைகளின் சிக்கலான வலையை வெளிக்கொணர
காவல்துறை தங்கள் விசாரணையை மேலும் மேற்கொள்ள வேண்டும் என்று குற்றவியல் நிபுணர்
ஷாஹுல் ஹமீத் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
மற்ற
குற்றவாளிகளும் அதே வழிகளில் துப்பாக்கிகளை அணுகக்கூடும் என்பதால் இது மிகவும்
முக்கியமானது என்று அவர் கூறினார்.
துப்பாக்கிச்
சூடு நடத்தியவரை அவர்கள் கைது செய்தவுடன், கேட்கப்பட வேண்டிய முக்கிய கேள்விகளில் ஒன்று, அவருக்கு ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது என்பதுதான். அது
நிலத்தடி வர்த்தகம் மூலம் நடந்தால், விநியோகச் சங்கிலியைக் கண்காணிக்க முழுமையான விசாரணை தேவை, மூளையாக இருந்தவர்கள் அல்லது சப்ளையர் வரை இந்த
ஆய்வு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்தபிப்ரவரி 8 ஆம் தேதி, செத்தியாஆலமில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 30 வயதுடைய ஒருவர், ஷாப்பிங் மாலுக்குள் இருந்த ஒரு துப்புரவுப் பணியாளர் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றார். சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார், மேலும் அவரை அடையாளம் கண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர், ஆனால் அவரது நோக்கத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *