பாசிர் மாஸ் மருத்துவமனையின் முக்கிய பிரிவின் கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு:


பாசிர் மாஸ் மருத்துவமனையின் ஹீமோடையாலிசிஸ் பிரிவின் கூரையின் ஒரு பகுதி நேற்று இரவு இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து இரவு 11.47 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டிடத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டில், அப்பகுதியில் தீ, வெடிப்பு அல்லது தரை அசைவு அபாயம் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டதாக பாசிர் மாஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் அஸ்மி ஹுசின் தெரிவித்தார்.

விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும், அதே நேரத்தில் மேலும் நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறையைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *