முந்தைய வெள்ளத்தின் சேற்றின் அடையாளம் மாறவில்லை... அதற்குள் மீண்டும் வெள்ளம்!

top-news
FREE WEBSITE AD

கிளந்தான், டிச 30: இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மீண்டு வரத் தொடங்கிய நிலையில், கிளந்தானில் உள்ள தனா மேரா, கோல க்ராய் மற்றும் மாச்சாங் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்  மீண்டும் வெள்ளத்தால் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர்.

நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கியது.

முந்தைய வெள்ளத்தில் சேற்றின் அடையாளங்கள் இன்னும் காணப்படும் நிலையில் அதற்குள் மீண்டும் வெள்ளம் சூழ்ந்திருப்பது அங்குள்ளவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரவு 10.45 மணி நிலவரப்படி, கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் வெள்ளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,187ஐ எட்டியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *