பக்தி கோஷத்துடன் வாணவேடிக்கைகள் அதிர வெள்ளி ரதம் பவனி வந்தது!

top-news
FREE WEBSITE AD

(தேவேந்திரன்)

இவ்வாண்டு தைப்பூச விழா நடைபெறும் நிலையில் தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி ரதத்தின் முன்னும் பின்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநடை மேற்கொண்டனர்.

எங்கு பார்ப்பினும் பக்திப் பரவசத்துடன் திருமுருகக் கடவுளுக்கு அரோகரா முழக்கங்கள் மத்தியில் வாணவேடிக்கைகள் விண்ணதிர முழங்கின.தலைநகர் ஜலான் பண்டாரிலிருந்து புத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் வரை ஆயிரக்கணக்கான தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவுகளும் பானங்களும் வழங்கப்பட்டன.வெள்ளிரதம் ஒவ்வோர் இடத்தில் நிற்கும்பொழுது போது ஒயிலாட்டம்,கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கண்ணைக் கவரும் நடனங்களும் இடம்பெற்றன




தைப்பூச விழாவையொட்டி காவடி விற்பனை அமோகமாக இருந்து வருகிறது புத்துமலை திருத்தலத்தில் உள்ள நாட்டின் பிரபல குத்தகையாளரான காலஞ்சென்ற கே எஸ்.திருமேனி விற்பனை மையத்தில் வண்ன வண்ணக் காவடிகள் விற்பனைக்குள்ளன. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையத்திற்கு காவடிகளை வாங்க வருபவர்களுக்கு சிறப்புக் கழிவுகள் வழங்கப்படும் என்று கலையரசிமணி திருமேனி கூறினார்.தமிழ் மலர் நாளிதழை உடன் எடுத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புக் கழிவு உண்டு என்று அவர் கூறினார். தொடர்புக்கு:010 527335


வெள்ளி ரதம் பவனி வருவதையொட்டி இவ்வாண்டும் தமிழ் மலர் பத்திரிகை மிகவும் விமரிசையாக தண்ணீர்ப் பந்தல் அமைத்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி பக்தர்களுக்கு சுவைபானங்களையும் உணவுகளையும் வழங்கியது.தமிழ் மலர் பத்திரிகை, அதன் அலுவலக வளாகத்தின் முன்பு ஈப்போ சாலையில் தண்ணீர்ப் பந்தல் அமைத்தது. ஓம்ஸ் அறவாரியமும், தமிழ் மலர் பத்திரிகையும் இணைந்து நடத்திய இந்த சிறப்பு தண்ணீர்ப் பந்தல் நிகழ்ச்சியில் ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.




ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தமிழ் மலர் இயக்குநர் டத்தோ எஸ்.எம்.பெரியசாமி, உலுசிலாங்கூர் ராஜர், தியாகராஜ் சங்கரநாராயணன், டாமன்சாரா சி.இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தண்ணீர்ப் பந்தல் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ரவாங்கை சேர்ந்த தமிழன் சிங்க நடனக் குழுவினர், சிங்க நடனத்தை வழங்கி சிறப்பித்தனர்.இந்த சிங்க நடனத்தைக் கண்டுகளித்த பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததோடு தங்களது உற்சாகத்தை அந்த நடனக் குழுவினருக்கு வழங்கினர். அதன் பிறகு ஒயிலாட்டம் வழங்கிய நடனக் விழுவினர் தங்களது ஆட்டத்தால் பக்தர்களைக் கவர்ந்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *