அவர்கள் பொய் சொல்கிறார்கள்! நான் வெட்கப்படுகிறேன்! – மகாதீர்

- Shan Siva
- 17 Dec, 2024
கோலாலம்பூர், டிச 17: பக்காத்தான்
ஹராப்பானில் (PH) இருந்த காலத்தில் தனது
அமைச்சரவையில் பணியாற்றிய மூன்று முன்னாள் அமைச்சர்கள் பத்து பூத்தே விவகாரத்தில்
பொய் சொன்னதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார்.
டாக்டர் வான் அசிசா வான்
இஸ்மாயில், அந்தோணி லோக் மற்றும்
முகமட் சாபு ஆகியோரின் கூற்றை நிராகரித்த அவர், இந்த விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க அவர்களுக்கு வாய்ப்பு இல்லை
என்று கூறினார்.
அவர்களின் கூட்டு அறிக்கை
உண்மையல்ல. இது அவர்கள் பொய்
சொல்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் எனது அமைச்சரவையில் இருந்ததற்காக
நான் வெட்கப்படுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Batu puteh விவகாரத்தில்
எடுக்கப்பட்ட முடிவில் அதிகமானப் பங்களிப்பு முன்னாள் துணைப் பிரதமர் Datuk
Seri Dr Wan Azizah Wan Ismail, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Datuk
Seri Mohamad Sabu மற்றும் ANTHONY LOKE ஆகியோருக்கு இருந்ததாக மகாதீர் குற்றம் சாட்டினார்.
தன்னை விசாரணைக்கு அழைத்தால் சம்பந்தப்பட்ட
மூவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், 2018 மே 21 ஆம் நாள் BATU PUTEH விவகாரம்
தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டாம் என முடிவெடுக்க காரியகர்த்தாவாக இருந்தது ANTHONY
LOKE என்பதால் அவரை முக்கிய நபராக தாம் கருதுவதாகவும் மகாதீர்
தெரிவித்தார்.
முதல் அமைச்சரவையில் இவர்களுடன்
கலந்துரையாடலை நடத்திய பின்னர் எடுக்கப்பட்ட முடிவு தான் 2018 மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால் இப்போது என்னை மட்டும் இவர்கள் கைகாட்டுவது நியாயமே இல்லாதது என மகாதீர் கூறினார்.
2018 ஆம் ஆண்டு அமைச்சரவைக்
கூட்டத்தின் போது, விண்ணப்பங்களைத் தொடர வேண்டாம் என்ற மகாதீரின் முடிவைப் பற்றி
மட்டுமே தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அம்மூவரும் தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *