அவர்களைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்! _ மசோதா தோல்வி குறித்து DAP

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 3: பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாக வரையறுக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து டிஏபி பொதுச் செயலாளர் Loke Siew Fook தனது ஏமாற்றத்தை வெளியிட்டார்.


போக்குவரத்து அமைச்சருமான அவர், “டிஏபி சார்பிலுள்ள 40 எம்பிக்களும் கலந்து கொண்டு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நிறுவனம் சார்ந்த சீர்திருத்த அஜெண்டாவை நிறைவேற்ற எங்கள் கட்சி கடுமையாக உழைத்தது,” என்றார்.


மொத்தம் 146 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அரசியலமைப்பு திருத்தத்திற்கு தேவையான 148 வாக்குகளில் இருந்து இரண்டு வாக்குகள் குறைவாக இருந்ததால், மசோதா நிறைவேறவில்லை.நிறுவன சீர்திருத்தத்தை காண விரும்பும் குடியுரிமை அமைப்புகள் மற்றும் வாக்காளர்கள், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத அல்லது ஆதரிக்காத எம்பிக்களை – எதிர்க்கட்சியினரையும் உட்பட – கேள்விக்குள்ளாக்க வேண்டும்,” என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.


பிகேஆர் எம்பி Wong Chen, இந்த தோல்வியை “மடானி அரசுக்கு ஒரு பெரிய பின்னடைவு” என விவரித்தார். “பிகேஆர் சார்பிலுள்ள அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மடானி அரசைச் சேர்ந்த எத்தனை எம்பிக்கள் வரவில்லை என்பதை கண்டறிய வேண்டும்,” என்றார்.


Constitution (Amendment) Bill 2026 எனப்படும் இந்த மசோதா, கடந்த பிப்ரவரி 23 அன்று சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் Azalina Othman Said மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பிரதமர் பதவிக்காலம் ஆயுள் முழுவதும் 10 ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து அல்லது இடைவெளியுடன் பணியாற்றிய காலமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், 10 ஆண்டு வரம்பை எட்டியவுடன் பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். இருப்பினும் புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை பராமரிப்பு (caretaker) அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றலாம் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *