சுகாதார ஊழியர்களுக்கான ஷிப்ட் முறை ரத்து:அது குளறுபடியினால் நிகழ்ந்தது அல்ல!

- Muthu Kumar
- 27 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 27-
சுகாதார ஊழியர்களுக்கான "மாறுபட்ட வேலை நேரமுறை (டபிள்யூ பிபி) திட்டத்தை ரத்து செய்ய வேண்டி வந்ததற்கு அதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணம் அல்ல என்று சுகாதார அமைச்சர் ஸூப்கிப்ளி அமாட் நேற்று விளக்கினார். அத்திட்டம் இன்னும் பரீட்சார்த்த கட்டத்தில் இருந்தபோதுதான் அமைச்சரவை அதனை ரத்து செய்தது என்று அவர் கூறினார்.
டபிள்யூபிபி திட்டத்தை ரத்து செய்ய வேண்டி வந்ததற்கு அதில் நிகழ்ந்த குளறுபடிகள் அல்லாமல் வேறு என்ன காரணமாக இருக்க முடியும் என்று சிலர் கேட்கின்றனர். அந்த முன்னோடித் திட்டத்தை அமலாக்கம் செய்வது பற்றி நான் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பதால் அதனை ரத்து செய்ததை குளுறுபடி என்று கூறமுடியாது என்றார் ஸுல்கிபிளி.
அது முன்னோடித் திட்டம் எனும் நிலையில் இருந்த நேரத்தில் அது பற்றிய விவரங்கள் வெளியே கசிந்தன. இதனால், அத்திட்டத்தில் மற்றவர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை எனும் குறைகூறல்கள் எழுந்தன என்று அமானா கட்சியின் தேசிய மாநாட்டில் நிறைவுரை ஆற்றியபோது அவர் சொன்னார். ஸூல்கிப்ளி அமானாவின் உதவித் தலைவரும் ஆவார்.
அத்திட்டத்தின் வழிகாட்டிகள் அடங்கிய கடிதம் வெளியானது தவறாகும். இது பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது. அத்திட்டத்தில் தங்களை ஏன் உள்ளடக்கவில்லை என நாட்டில் உள்ள மருத்துவர்கள் கேள்வி கேட்க ஆம்பித்தனர். இந்த விவகாரத்தை அமைச்சரவையில் எழுப்பினேன். சூழ்நிலையை நான் விளக்கியவுடன் அதனை அந்த முன்னோடித் திட்டத்தை அமைச்சரவை ரத்துசெய்தது என்றார் அவர்.
பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சுகாதாரத்துறைச் சேவைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் பணிநேரத்தை எவ்வாறு மறுஅட்டவணை இடுவது என்பது குறித்தும் ஆராய்வதற்கும் சுகாதார அமைச்சு பணிக்குழுவொன்றை அமைத்துள்ளது.
சுகாரத்துறை ஊழியர்கள் குறைந்த நேரத்திற்கு வேலை செய்யலாம். ஆனால், வார நாட்களில் மாலை 5மணிக்கு மேல் வேலை செய்தால் அவர்களுக்கு அலவன்ஸ் கிடைக்காது என்று அந்த உத்தேச டபிள்யூபிபி திட்டம் பரிந்துரைத்திருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *