இன்ஸ்டாவில் விளம்பரம் செய்து ஓரினச்சேர்க்கை விருந்து! பிடிபட்ட சீன பிரஜையின் நூதன டெக்னிக்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 2: கடந்த மாதம் கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருள் கலந்ததாகக் கூறப்படும் ஓரினச்சேர்க்கையாளர் விருந்து தொடர்பாக 50 பேருடன் கைது செய்யப்பட்ட சீன நாட்டவர், அந்த நிகழ்வின் அமைப்பாளர் என்று நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த நபர் தனது இன்ஸ்டாகிராமில் அந்த விருந்தை விளம்பரப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசைன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பங்கேற்பாளர்களின் பயன்பாட்டிற்காகவே இருந்தன என்றும், தற்போதைக்கு போதைப்பொருள் விநியோகத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஹுசைன் கூறினார்.

இருப்பினும், போதைப்பொருட்களை வழங்கியவரைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

விருந்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிடிபட்ட 51 பேர் மீதும் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹுசைன் தெரிவித்தார்.

சீன நாட்டவர் உட்பட அவர்களில் 34 பேர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த சீன நபர் மீது சுயமாக போதைப்பொருள் உட்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 மற்ற 17 பேர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 24 அன்று நடத்தப்பட்ட சோதனையின் விளைவாக, RM103,070 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருந்தில் கலந்துகொண்ட ஒருவர் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். அந்த நபரின் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காவல்துறை இன்னும் காத்திருப்பதாக ஹுசைன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *