PN பொருளாளர் பதவியிலிருந்து அகமட் சம்சூரி மொக்தார் திடீர் ராஜினாமா!

- Shan Siva
- 11 Dec, 2024
கோலாலம்பூர், டிச 11: பெரிக்காத்தான் நேஷனல் பொருளாளர் பதவியில் இருந்து அகமட் சம்சூரி மொக்தார் ராஜினாமா செய்துள்ளார்.
PAS துணைத் தலைவரும் திரெங்கானு முதலமைச்சருமான அவர், இன்று PN நிர்வாகத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக Harakah Daily செய்தி வெளியிட்டுள்ளது.
பெரிக்காத்தானின் அங்கமான PAS இன் முக்கிய நபர்களில் ஒருவராக சம்சூரி கருதப்பட்டதால், இந்த ராஜினாமா அதிர்ச்சியளிக்கிறது என்று Harakah Daily தெரிவித்துள்ளது.
இன்று, புதன்கிழமை, 11 டிசம்பர் 2024 அன்று, PN பொருளாளர் பதவியிலிருந்து ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அவ்வளவுதான். நன்றி என்று சம்சூரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து PN எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
திங்களன்று நடந்த கூட்டத்தின் போது கூட்டணியில் பல முக்கிய நியமனங்களை PN உச்சமன்றம் உறுதி செய்ததால் இந்த நடவடிக்கை வந்துள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணியின் பொதுச் செயலாளராக அஸ்மின் அலி நியமனம் செய்யப்பட்டதை PN தலைவர் முகைதின் யாசின் உறுதிப்படுத்தியதோடு, வனிதா தலைவராக மாஸ் எர்மியாத்தி சம்சுதீனை நியமிப்பதாகவும் அறிவித்ததாக செய்தி வெளியானது.
ஹம்சா ஜைனுடின் பிஎன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், ராட்ஸி ஜிடின் மற்றும் ரொனால்ட் கியாண்டி ஆகியோர் பிஎன் உச்சமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், அஹ்மத் பைசால் அசுமு PN தகவல் தலைவராக நியமிக்கப்பட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *