ஆசியான் இணைப்பில் கலந்துகொள்ள பேங்காக் சென்றுள்ளார் தொக் மாட்!

- Muthu Kumar
- 22 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 22-
தற்போது தாய்லாந்து, பேங்காக்கில் நடைபெறும் விரிவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற கலந்தாலோசிப்பில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் கலந்து கொண்டார்.
2023ஆம் ஆண்டு ஆசியான் தலைவர்களால் அமைக்கப்பட்ட ASEAN TROIKA செயல்முறை மியன்மார் நெருக்கடியைக் கையாள்வதில் தொடர்ச்சியான வழிகளை உறுதி செய்வதற்காக தற்போதைய கடந்த கால, எதிர்கால ஆசியான் தலைவர்களை உள்ளடக்கியதாகும்.
இந்தோனேசியா, லாவோஸ், மலேசியாவும் தற்போது TROIKA-வில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரப்பூர்வ மற்ற கலந்தாலோசிப்பு. 5பிசி எனப்படும் ஐந்து அம்ச கருத்தொற்றுமையை நடைமுறைப் படுத்துவதில் TROIKA உறுப்பினர் களிடையே ஒருங்கிணைப்பு,ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக விஸ்மா புத்ரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதோடு, மியன்மாரில் தீர்வைக் கண்டறிவதற்கான ஆசியான் ஆய்வும் முடிவும் அதில் உட்படுத்தப்பட்டுள்ளன.ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், பிற ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட விரிவாக்கம் கண்ட அதிகாரப்பூர்வமற்ற கலந்தாலோசிப்பில், மியன்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க ஆசியானின் ஒட்டுமொத்த முயற்சிகள், 5பிசி அமலாக்கத் தின் திசை குறித்து கலந்துரையாடப்பட்டது.2025ஆம் ஆண்டு ஆசியானுக்கு தலைமையேற்கும் மலேசியா, மியன்மார் மோதலைச் சமாளிக்கும் அணுகுமுறையையும் சமர்ப்பித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *