எம்ஏசிசி கைது செய்துள்ளவர்கள் எம்பிஐயின் முன்னாள் ஊழியர்கள்!

top-news
FREE WEBSITE AD

சுங்கை பூலோ, ஜன. 3-

சிலாங்கூர் மந்திரி பெசார் இன்கோர்ப்பரேட்டட் (எம்பிஐ லஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பில், மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தினால் (எம்ஏசிசி) மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ள அல்லது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் எம்பிஐயின் முன்னாள் ஊழியர்கள் என்று. அதன் தலைமை நிர்வாக அதிகாரி சைபோல்யஸாம் யூசோப் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் நடப்பு எம்பிஐ ஊழியர்கள் யாரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்."தகவல் பதிவுகளை சரிபார்த்தார். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் எம்பிஐயின் முன்னாள் ஊழியர்களாவர். இப்போது வரையில், நடப்பு எம்பிஐ ஊழியர்கள் அல்லது துணை நிறுவனங்களின் ஊழியர்கள் யாரும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. எனினும், அவர்கள் சாட்சிகளாக மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர், சுங்கை பூலோவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது சைபோல்யஸாம் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கும் குறைவாகவே இருப்பதாகவும் எம்பிஐ துணை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் விசாரணைக்காக மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

"எம்ஏசிசிக்கு நாங்கள் எங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம். இப்போதைக்கு, தனது விசாரணைக்காக எம்பிஐயின் நடப்பு ஊழியர்களை சாட்சிகளாக மட்டுமே எம்ஏசிசி அழைத்திருக்கிறது என்று சைபோல்யஸாம் கூறினார்.

எம்பிஐ லஞ்ச ஊழல் மீதான தனது விசாரணையில் புதிய தகவல்களை எம்ஏசிசி கண்டு பிடித்திருப்பதாக, அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி கடந்த அக்டோபரில் தெரிவித்திருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் வரையில், ஒன்பது இடங்களில் சோதனைகளை மேற்கொண்ட எம்ஏசிசி, ரொக்கமாக 60 லட்சம் வெள்ளியை கைப்பற்றி இருந்தது. ஒரு வீட்டில் மேற்கொண்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட 50 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள வெளிநாட்டு நோட்டுகளும் அதில் அடங்கும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *