iPayment முறை அனைத்து துறைகளிலும் வேண்டும்! - அன்வார்

- Shan Siva
- 12 Feb, 2025
புத்ராஜெயா, பிப்1 12: மார்ச் மாதத்திற்குள்
மத்திய அரசின் (iPayment) எனப்படும் மின்னணு பணம் செலுத்தும்
முறையை (iPayment) அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்
என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் மேம்பாடுகள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட சேவைகளிலிருந்து பொதுமக்கள்
உடனடியாகப் பயனடைவதை உறுதிசெய்ய, அமைப்பின் செயல்படுத்தலை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்
வலியுறுத்தினார்.
நாங்கள் விவாதிக்கும் சீர்திருத்தங்களின் பலன்களை பெரும்பான்மையான மக்கள்
எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதில்தான் உண்மையான அளவுகோல் (வெற்றியின்) உள்ளது
என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.
பணமில்லா சமூகத்தை நோக்கி பொதுத்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை இயக்குவதில் iPayment முக்கிய பங்கு
வகிக்கிறது என்று அன்வார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *