விபத்தில் தாயும் கருவிலிருந்த சிசுவும் பலி!

top-news

பிப்ரவரி 10,

குளுவாங்கில் உள்ள கம்போங் மெலாயு சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டின் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த 32 வயதான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன் அவரின் கருவில் இருந்த 8 மாதச் சிசுவும் உயிழிந்ததாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் தன் பெண் நண்பருடன் குளுவாங்கிற்குச் சென்றுக் கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தாகவும் இரவு 8 மணிக்குக் கருவில் இருந்த சிசு உயிரிழந்த நிலையில் இன்று பிற்பகல் 1.59 மணிக்கு 32 வயதானத் தாயும் சிகிச்சை பலனின்றி குளுவாங் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

சிறிய விபத்து என்ற போதும் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் சிசுவும் தாயும் உயிரிழந்ததாகவும் உடன் இருந்த 28 வயது பெண் நண்பர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.

Seorang wanita hamil dan bayi dalam kandungannya maut selepas kereta yang dinaikinya hilang kawalan dan merempuh dinding rumah di Kampung Melayu, Kulai. Rakannya mengalami kecederaan ringan. Pendarahan teruk menjadi punca kematian ibu dan bayi dalam kandungan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *