150 ஆண்டுகள் வாழ வேண்டும் என மரணத்துக்கு சவால்விட்ட மைக்கேல் ஜாக்ஸன்!
- Muthu Kumar
- 25 Sep, 2025
இசையை காதலிக்கும் உலக மக்கள் மத்தியில் 'முடிசூடா மன்னன்' என்ற பட்டத்தை பெற்றவர் மைக்கேல் ஜாக்ஸன். அவர் இசை உலகை மட்டுமல்ல, நடனத்தையும், கலையையும் உலகளவில் மறக்க முடியாத அளவுக்கு உயர்த்தி வைத்தவர்.
ஆனால், இந்த அசாதாரணமான கலைஞர் தனது வாழ்க்கையை 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவோடு திட்டமிட்டு சென்றார் என்பதே பலருக்கும் தெரியாத உண்மை.
அவரது கனவை நனவாக்க அவர் செய்த முன் ஏற்பாடுகள், வைத்திருந்த மருத்துவ பராமரிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் அனைத்தும் இன்று கூட உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஆனால், மனித வாழ்க்கையின் இறுதி உண்மைதான் அவரின் பயணத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தது.
மைக்கேல் ஜாக்ஸனின் மனதில் ஒரு பெரிய ஆசை இருந்தது - '150 ஆண்டுகள் வாழ வேண்டும்'. அந்த இலக்கை அடைய அவர் தனது வாழ்க்கையை முழுமையாக மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து கொண்டார்.
*தினமும் அவரது தலைமுடி முதல் விரல் நகங்கள் வரை முழுமையாக பரிசோதிக்க 12 மருத்துவர்கள் வீட்டில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
*அவர் சாப்பிடும் ஒவ்வொரு உணவும், ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட பிறகே அவரது dining table-க்கு வந்தது.
*படுக்கையறையிலும் கூட, ஆக்ஸிஜன் சரியாக பரவ சிறப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அவருக்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய தயாராக இருந்த நன்கொடையாளர்கள் பட்டியல் வைத்திருந்தார். அவர்களும் தனி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தனர்.
மைக்கேல் ஜாக்ஸன் தனது ஒவ்வொரு அசைவையும் மருத்துவர்களின் ஆலோசனைக்கே ஒப்படைத்திருந்தார். மருத்துவர்களின் அனுமதியின்றி அவர் ஒரு அடியும் எடுத்து வைக்கவில்லை என்பது அவரை நெருங்கியவர்கள் சொன்ன உண்மை.
இதெல்லாம் பார்த்தால் அவர் தனது ஆரோக்கியத்தை பாதுகாக்க எவ்வளவு கடுமையான முயற்சி செய்தார் என்பதை காட்டுகிறது. உலகின் மிகச்சிறந்த மருத்துவர் குழுவையும், எப்போதும் 'தயார்' நிலையில் வைத்திருந்தார்.
ஆனால், வாழ்க்கை என்ற பயணம் எப்போதும் நம் திட்டப்படி செல்லாது என்பதற்கு ஜாக்ஸனின் மரணம் ஒரு மிகப்பெரிய உதாரணம்.2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, அவர் தனது 50-வது வயதில், திடீரென இதயநோயால் பாதிக்கப்பட்டார். உடனடியாக 12 மருத்துவர்களும் அவரை காப்பாற்ற முயன்றனர். கூடவே லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர்.
ஆனால், எதுவும் பயன் அளிக்கவில்லை. மரணத்தின் பிடியில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியவில்லை.
ஜாக்ஸனின் மரணம் உலகம் முழுவதும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.அவரின் இறுதி நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை, உலகம் முழுவதும் 2.5 மில்லியன் பேர் நேரடியாக பார்த்தனர். அது ஒரு இசை நிகழ்ச்சி இல்லை, மாறாக அவர் ரசிகர்களுக்கு 'பிரியாவிடை நிகழ்ச்சி' ஆக மாறியது.
மைக்கேல் ஜாக்ஸன் மரணத்திற்கு சவால்விட முயன்றார். ஆனால் இறுதியில் மரணமோ அவருக்கே சவால் விட்டது.
இந்தச் சம்பவம் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம்:இந்த உலகில் எதுவும் நமக்குச் சொந்தமானது அல்ல.நம் உயிரே கூட நமக்குச் சொந்தமானது அல்ல.எவ்வளவு பணம் இருந்தாலும், எத்தனை மருத்துவர் இருந்தாலும், வாழ்க்கையை நாம் கட்டுப்படுத்த முடியாது.'பணம் சேர்ப்பது பாவமல்ல! ஆனால் பணம் வைத்திருப்பதால் மட்டுமே பணக்காரர் என்று நினைப்பதே பாவம்.'
நம் வாழ்க்கையில் மனநிறைவு, திருப்தி, ஆரோக்கியம், நன்றியுணர்வு தான் உண்மையான செல்வம்.மைக்கேல் ஜாக்ஸன் உலகையே ஆடவைத்தவர். ஆனால், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் நமக்கு சொல்லும் பாடம் - எவ்வளவு பெரிய கனவுகளும், எவ்வளவு பெரிய ஏற்பாடுகளும் இருந்தாலும், இறப்பை யாராலும் தவிர்க்க முடியாது என்பதுதான்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



