வெளியுறவு அமைச்சர் உணவகத்தில் புகைபிடித்தாரா? அப்படியானால் தண்டனை உறுதி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்‌, டிச.18: உணவகமொன்றில்‌ புகை பிடித்ததாகக்‌  கூறப்படும்‌ வெளியுறவு அமைச்சர்‌ முகமது ஹசானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை        ்‌ மேற்கொள்ளப்படும்‌ என்று  சுகாதார அமைச்சர்‌ ஸுல்கிப்ளி அமாட்‌  நேற்று கண்டிப்புடன்‌ கூறினார்‌.           

எவரும்‌ சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்‌ அல்லர்‌ என்று தமது எக்ஸ்‌ தளப்‌ பதிவில்‌ அவர்‌ குறிப்பிட்டுள்ளார்‌.                 

உணவகமொன்றில்‌ முகமது ஹசான்‌ புகைபிடிப்பதைக்‌ காட்டுவதாகக்‌ கூறப்படும்‌ ஒரு புகைப்படம்‌ வெளியாகி உள்ளது. அது பற்றி கருத்துரைத்தபோது ஸுல்கிப்ளி இதனைத்‌ தெரிவித்தார்‌. 

அக்டோபர்‌ முதல்‌ தேதியன்று நடப்புக்கு வந்த 2024ஆம்‌ ஆண்டு புகையிலைப்‌ பொருட்கள்‌ சட்டம்‌, இரட்டைப்‌ போக்கின்றி கடுமையாக அமல்படுத்தப்படும்‌ என்றும்‌ ஸுல்கிப்ளி நேற்று எச்சரித்தார்‌.

ஆனால்‌, அப்படத்தில்‌ இருப்பது முகமது ஹசான்தான்‌ என்பதைத்‌ தம்மால்‌ உறுதிப்படுத்த முடியவில்லை என்றும்‌ அவர்‌ கூறினார்‌.

புகைபிடிக்கத்‌ தடைசெய்யப்பட்ட இடங்களில்‌ புகை பிடிக்கும்‌ நபர்களுக்கு பத்தாயிரம்‌ வெள்ளி வரைக்குமான அபராதம்‌ மற்றும்‌ ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்‌. அதே நேரத்தில்‌, புகை பிடிக்கக்கூடாது எனும்‌ விளம்பரத்தை வைத்திராத வியாபாரத்தள உரிமையாளர்களுக்கு மூவாயிரம்‌ வெள்ளி அபராதம்‌ அல்லது ஆறு மாதச்‌ சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *