ஃபெர்ரி, பயணிகள் படகு ஆபரேட்டர்களுக்கு டீசல் மானியம்!

- Shan Siva
- 20 Dec, 2024
புத்ராஜெயா, டிச 20: பிரதான தீவுகளில் உள்ள ஃபெர்ரி, பயணிகள் படகு மற்றும் ரோல்-ஆன் ரோல்-ஆஃப் (RORO) படகு ஆபரேட்டர்களுக்கு ஜனவரி 1 முதல் டீசல் மானியம் வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
டீசல்
மானியத்தால் சுமார் 40 ஆபரேட்டர்கள்
பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்
தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட
ஆபரேட்டர்கள் முதல் கோரிக்கைகளை பிப்ரவரி 20 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம் என்றார் அவர்.
பிரதான தீவுகளில்
உள்ள படகுகள், பயணிகள் படகுகள்
மற்றும் RORO படகுகளுக்கான
மானிய விலை டீசல் விலை லிட்டருக்கு RM2.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதிகபட்ச மானிய
விகிதம் லிட்டருக்கு 50 சென் என்று அவர்
இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *