அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாத பட்சத்தில் கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், பெரிய அளவில் குண்டுவீச்சுகள் நடைபெறும்” என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்க ராணுவம் முழுமையாக தயார் நிலையில் இருப்பதாகவும், தேவையான உத்தரவு கிடைத்தவுடன் உடனடி தாக்குதலுக்கு தயாராக உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. டிரம்ப், ஈரான் தரப்பில் ஒருமித்த தீர்மானம் வரவில்லை என்றும், அதனால் ராணுவம் “எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஈரான் தரப்பும் எதிர்வினை காட்டத் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போராட்டம் மேலும் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.