Tik Tok Scam - RM 134,000 இழந்த பெண்!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், டிச 20: டிக்டாக் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட மோசடி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, ஓய்வு பெற்ற பெண் ஒருவர் RM134,000க்கு மேல் இழந்துள்ளார்.

63 வயதான பாதிக்கப்பட்ட நபர், டிசம்பர் 10 அன்று விளம்பரப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தால் கவரப்பட்டு ஏமாந்ததாக காவல்துறையில் புகாரளித்ததாக பகாங் காவல்துறைத் தலைவர்  டத்தோஸ்ரீ யஹாயா ஒஸ்மான் தெரிவித்தார்.

அந்த பெண் பின்னர் "B1VIP" என்ற டெலிகிராம் குழுவில் சேர்வதற்கான இணைப்பைப் பெற்றதாகவும், அதற்குப் பதிலாக RM45 பெற்று RM30 டெபாசிட் செய்வதன் மூலம் தனது முதலீட்டைத் தொடங்கினார் என்றும் அவர் கூறினார்.

லாபத்தை நம்பி, அவர் தனது முதலீட்டை அதிகரித்ததை அடுத்து,  தனது சேமிப்பிலிருந்து ஒன்பது வெவ்வேறு கணக்குகளில் RM134,000 க்கு மேல் 12 பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்.

இருப்பினும், தனது முதலீட்டு வருவாயை திரும்பப் பெறுவதற்கு அதிக மூலதனத்தைச் சேர்க்கச் சொன்னதால் சந்தேகமடைந்த அவர் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல்துறையை நாடினார் என்று அவர் கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *