சபா ஆளுநர் ஆகிறாரா மூசா அமான்?

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினாபாலு, டிச. 14-

சபா மாநிலத்தின் பதினோராவது ஆளுநர் யார் என்பது வரும் செவ்வாய்க்கிழமை தெரியவரும். அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் புதிய ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

ஆயினும், அப்பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்பதை முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹஜிஜி நூர் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. தற்போதைய ஆளுநரான துன் ஜூஹார் மாஹிருடினின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் நடைபெறவிருக்கும் எளிமையான சடங்கொன்றில் புதிதாகப் பதவியேற்கப் போகும் ஆளுநரிடம் மாட்சிமை தங்கிய பேரரசர் பதவி நியமனக் கடிதத்தை வழங்குவார்.

எழுபத்தோரு வயதான ஜூஹார், 2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று ஆளுநராக நியமிக்கப்பட்டார். மூன்று முழுத் தவணைகளுக்கு அப்பதவியில் நீடித்து அவருக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது.எழுபத்து மூன்று வயதான மூசா முன்னாள் முதலமைச்சர் ஆவார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *